Text copied!
Bibles in Tamil

எண் 13:7-20 in Tamil

Help us?

எண் 13:7-20 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
15 காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
18 தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
20 நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
எண் 13 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்